ஞாயிறு, 6 மே, 2018

வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்படுவது ஏன்?

கடந்த இரண்டு வருடங்களாகவே 'வாட்ஸ்அப் அட்மின் கைது' என்பது போன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் காணலாம். 

அப்படிக் கைதாகும் பெரும்பாலான அட்மின்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர்களின் க்ரூப்களில் தவறான தகவல்கள் பரவியது என்பதுதான். 

அவ்வப்போது வரும் இதுபோன்ற செய்திகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இன்று வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அனைவருமே கவனிப்பதற்கு இதில் ஒரு விஷயம் உண்டு. 

ஒரு அட்மின் கைதாவதற்கு அவரே பொய்யான தகவல்களை, சட்ட விரோத தகவல்களைப் பரப்பவேண்டும் என்பதில்லை. 

அவரின் க்ரூப்பில் இருக்கும் யார் பரப்பினாலும் அவருடன் சேர்த்து, அட்மினையும் கைது செய்கிறார்கள். 

யாரும் புகார் அளிக்காதவரை பிரச்னையில்லை. 

மாறாக, யாரேனும் உங்கள் மீது புகார் அளித்தால், நிச்சயம் வம்புதான். 

இப்படி இந்த அட்மின்கள் விஷயத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன.

எனவே வெறுமனே வாட்ஸ்அப் அட்மினாக இருப்பதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை; 

ஆனால், உங்கள் க்ரூப்பில் இருப்பவர்கள் மேற்கண்ட உதாரணங்கள் போல தவறான விஷயங்களில் தலையிட்டால் காவல்துறை மோப்பம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்; 

அதுபோன்ற சிக்கல்களில் மட்டும் தலையைக் கொடுக்காமல் இருந்தாலே போதும். அட்மின்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை!


Source - https://bit.ly/2wfOV7g

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக