இஸ்லாத்தைப் பலரும் மதமாகவே எண்ணுகின்றனர்.
அது அகம்,புறம் இரண்டையும் வழி நடத்திச் செல்லக்கூடிய மார்க்கமென அறிந்தார் இல்லை.
அண்ணலாரையும் ஒரு மத நிறுவனராகவே கருதுகின்றனர்.
அவர் கடந்த கால சமுதாயத் தலைவர் என்பதையோ நிகழ்கால வாழ்வியலைச் செம்மையாக்கியவர் என்பதையோ வருங்கால மக்களுக்குரிய மகத்தான வழியை வகுத்துத் தந்தவர் என்பதையோ
புரிந்தார் இல்லை.
அண்ணலாரைப் பற்றியும் அவர்கள் மூலம் அளிக்கப்பட்ட திருக்குர்ஆன் கருத்துகள் பற்றியும் ஒவ்வொரு முஸ்லிமும் சுருக்கமாக மாற்றுமதச் சகோதரரிடம் சொல்லியிருந்தால் ‘இஸ்லாமியச் சித்திரம்’ அனைவரிடமும் தெளிவாக காணக்கிடைத்திருக்கும்.
அந்தப் பெருங்குறையை நீக்கினால்தான் ‘இஸ்லாம்’ எனில் சாந்தி என்பதும் அது கூறுவது ‘சரணாகதி தத்துவம்’ என்பதும் புரியும்.
ஆன்மிகத் தலைவர் முதல் அரசியல் தலைவர் வரையுள்ள பலரிடம் நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகள் முழுமையாக இருக்காது.
ஆனால் அண்ணலாரின் அக புற வாழ்க்கையில் முன்மாதிரிகள் அனைத்தும் இருக்கக் காணலாம்.
அவை நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகளாக இருப்பதால் அண்ணலாரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
நபிகளாரின் வாழ்வை வாசித்தறிந்தால்
நம் வளமான வாழ்க்கைக்கு உரமாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அது அகம்,புறம் இரண்டையும் வழி நடத்திச் செல்லக்கூடிய மார்க்கமென அறிந்தார் இல்லை.
அண்ணலாரையும் ஒரு மத நிறுவனராகவே கருதுகின்றனர்.
அவர் கடந்த கால சமுதாயத் தலைவர் என்பதையோ நிகழ்கால வாழ்வியலைச் செம்மையாக்கியவர் என்பதையோ வருங்கால மக்களுக்குரிய மகத்தான வழியை வகுத்துத் தந்தவர் என்பதையோ
புரிந்தார் இல்லை.
அண்ணலாரைப் பற்றியும் அவர்கள் மூலம் அளிக்கப்பட்ட திருக்குர்ஆன் கருத்துகள் பற்றியும் ஒவ்வொரு முஸ்லிமும் சுருக்கமாக மாற்றுமதச் சகோதரரிடம் சொல்லியிருந்தால் ‘இஸ்லாமியச் சித்திரம்’ அனைவரிடமும் தெளிவாக காணக்கிடைத்திருக்கும்.
அந்தப் பெருங்குறையை நீக்கினால்தான் ‘இஸ்லாம்’ எனில் சாந்தி என்பதும் அது கூறுவது ‘சரணாகதி தத்துவம்’ என்பதும் புரியும்.
ஆன்மிகத் தலைவர் முதல் அரசியல் தலைவர் வரையுள்ள பலரிடம் நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகள் முழுமையாக இருக்காது.
ஆனால் அண்ணலாரின் அக புற வாழ்க்கையில் முன்மாதிரிகள் அனைத்தும் இருக்கக் காணலாம்.
அவை நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகளாக இருப்பதால் அண்ணலாரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
நபிகளாரின் வாழ்வை வாசித்தறிந்தால்
நம் வளமான வாழ்க்கைக்கு உரமாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக