திங்கள், 11 ஜூன், 2018

பெற்றோர்களுக்காக ..

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் .

சிறுவர்களை நல்ல பண்புகளுடனும் , பழக்கவழக்கத்துடனும் , பாசத்துடன் அன்பையும் காட்டி பெற்றோர்கள் வளர்க்க வேண்டியது அவசியம்.

இளம் வயதிலேயே சிறந்த அறிவுள்ள புத்திசாலியான பிள்ளையாக அவர்களை வளர்த்து இந்த உலகில் அவனும் ஒரு சிறந்த தலைமகனாக மிளிர வேண்டும் .

இளம் வயதில் கல்வி அறிவின்றி வளரும் சிறுவர்கள் பெரியவர்களானதும் இந்த உலகில் கவனிப்பார் யாரும் அற்று ஒரு அடிமைத்தனுத்துக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் தமது கஷ்டங்களை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆடம்பரமான வாழ்க்கை வாழும் போது அவர்களுக்கு கஷ்ட, துன்பங்கள் தெரியாது வளருகிறார்கள்.

ஒரு சிறுவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவனது பெற்றோர் மற்றும் அவனிருக்கும் சூழல் என்பன காரணிகள் ஆகின்றன.

எனவே சிறுவர்களிடம் பேசி கத்துவதை விட அன்பால் அவர்களை திருத்த முயலுங்கள்.

எதனையும் அன்பாக , ஆறுதலாக சொல்லி பாருங்கள் .

அன்பால் முடியாதது ஒன்றும் இல்லை . 


அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக