திங்கள், 25 ஜூன், 2018

தகராறு என்ற சொல்...

ஆடுகள் இரண்டு எதிரெதிரே வரும்போது விலகி வழிகொடுக்காது;

இரு ஆடுகளுமே வழிவிடாத நிலையில் மோதல் ஏற்படும்;

இரண்டுமே தலைகளால் முட்டிக் கொள்ளும்.

இதையே தமிழர்கள் தகராறு எனக் குறிப்பிட ஆரம்பித்தனர்.

தமிழில் ஆட்டை தகர் என்றனர்.

ஆறு என்றால் வழி.

தகராறு என்றால் தகரின் ஆறு.

ஆட்டின் வழி தகராறு

அதிலிருந்து பிறந்த சொல்தான் தகராறு.

செம்மறியாடுகள் வெள்ளாடுகளைவிட அறிவு குறைந்தவை.

மேயும் செம்மறியாடுகள் எதிரில் சிறு கால்வாய் வருமாயின் அவை அதைத் தாண்டாது நிற்கும்.

இதற்காகவே இடையர்கள் செம்மறியாடுகளிடையே இரு வெள்ளாடுகளை மந்தையில் சேர்த்திருப்பார்கள்.

வெள்ளாடுகள் கால்வாயைத் தாண்டிவிடும். அதைப் பார்த்துச் செம்மறியாடுகளும் தாண்டும்.

ஆடுகளை மேய்ப்பவர்கள் இயற்கை அறிவை அதிகமாகப் பெற்றிருப்பர். காடு கழனிகள், தோட்டந்துரவுகள் போன்றவற்றில் அறிவுகளைப் பெற்றிருப்பதைப்போல விண்வெளியைப் பற்றிய அறிவுகளையும் அதிகம் பெற்றிருப்பர்.

மாக்களை மேய்க்கும் திறமை பெற்றவர்கள் மக்களை மேய்க்கும் திறமையில் வலுவானவர்களாக இருப்பார்கள் என்பதாலோ, இறைத்தூதர்களில் பலர் நல்ல மேய்ப்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

இபுறாகீம் நபிகளாரிடமிருந்து ஈஸா நபி வரை பலரும் ஆடு மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டவர்களே!

அவர்களைப் போலவே சிறுவயதில் முஹம்மது நபியவர்களும் ஆடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.


நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு
என்ற புத்தகத்தில் ..

- தாழைமதியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக